(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
நடாஷா எதிரிசூரிய மற்றும் SL-Vlog உரிமையாளரான புருனோ திவாகர ஆகியோரை எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பௌத்த மதத்தை அவமரியாதை செய்யும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய, மே 28ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டார்.
அதனையடுத்து, SL-Vlog இன் உரிமையாளர் புருனோ திவாகராவும் நதாஷா எதிரிசூரியவுக்கு உதவியதற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது