கொழும்பு – காலி வீதியின் அமெரிக்க தூதுவராலயத்திற்கு அருகில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிரியாவில் இடம்பெறும் கொலைகளை நிறுத்துமாறும் கியூபாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை நீக்குமாறும் வலியுறுத்தி எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டமையே இதற்குக் காரணமாகும்.
பெரட்டுகாமி சாமாஜவாதி கட்சியினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்தப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.