மஹிந்த தலைமையில் 1வது நிறைவேற்று சபை கூட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் முதலாவது நிறைவேற்று சபை கூட்டம் அதன் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தவிசாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தலைமையில் இன்று(25) அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் செயலாளர் பசில் ராஜபக்ஷ, தேசிய அமைப்பாளர்களான விமல் வீரவன்ச மற்றும் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.