(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களுக்கும் எதிர்வரும் செவ்வாய் கிழமை (07) கொழும்பிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது.