கந்தான நகரிலுள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் பேஸ்புக் ஊடாக பிரபல்யம் அடைந்துள்ளது.
நபர் ஒருவர் கோழி இறைச்சி கறி கொள்வனவு செய்வதற்கு நேற்று இரவு உணவகத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு தான் கொள்வனவு செய்த கோழி இறைச்சி கறியில் புழுக்கள் இருப்பதனை அவதானித்த குறித்த நபர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
119 என்ற இலக்கத்திற்கு அழைப்பு மேற்கொண்டு இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன் பின்னர் அங்கு வந்த பொலிஸார் இந்த சம்பவத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்த்துள்ளார்.