அமெரிக்காவுக்கே முடியவில்லை; இலங்கை எம்மாத்திரம்..?

அமெரிக்காவுக்கே முடியவில்லை; இலங்கை எம்மாத்திரம்..?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்கூட்டிய புலனாய்வு தகவல்கள் கிடைத்தபோதும் அமெரிக்காவால் கூட செப்டம்பர் 11 தாக்குதலை தடுக்க முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை மாத்திரமில்லை ஏனைய உலகநாடுகளும் பயங்கரவாத தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, உலகின் மிகவும் வலிமை வாய்ந்த நாட்டினால் கூட அதன் பாதுகாப்பு தலைமையகமாக பென்டகனை பாதுகாக்க முடியவில்லை. ஆயிரக்கணக்கான உயிர்களை அது இழந்தது என தெரிவித்துள்ளார்.