தேங்காய் எண்ணெய் : அறிக்கை அடுத்த வாரம்

தேங்காய் எண்ணெய் : அறிக்கை அடுத்த வாரம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இறக்குமதி செய்யப்பட்ட 13 தேங்காய் எண்ணெய் கொள்கலன்களில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் அடங்கியுள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல் தொடர்பில், நுகர்வோர் அதிகார சபையின் பரிசோதனை அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரிசோதனைக்காக, நாடு முழுவதும் உள்ள பல்வேறு வர்த்தக நிலையங்களில், தேங்காய் எண்ணெய் மாதிரிகள் பெறப்பட்டதாக நுகர்வோர் அதிகார சபையின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.