உறுதியளித்தவாறு பண்டிகை காலப்பகுதியில் குறைந்த விலையில் அரிசி

உறுதியளித்தவாறு பண்டிகை காலப்பகுதியில் குறைந்த விலையில் அரிசி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஏற்கனவே உறுதியளித்த வகையில் பண்டிகை காலப்பகுதியில் குறைந்த விலையில் அரிசி நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்கப்படுமென அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது சந்தையில் காணப்படும் அரிசியின் விலை கட்டுப்படுத்தப்பட்டு, அரிசி மாபியா செயற்பாடுகள் அரசாங்கத்தினால் முறியடிக்கப்படுமென அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.