ஜப்பானின் ஒசாகாவில் அவசர நிலை அறிவிப்பு

ஜப்பானின் ஒசாகாவில் அவசர நிலை அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் |  ஜப்பான்) – ஜப்­பா­னின் ஒசா­கா­வின் மேற்கு வட்­டா­ரத்­தில் கொரோனா தொற்று நான்கா­வது முறை­யாக அதி­க­ரித்து வரு­கிறது.

அதைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் அங்கு நேற்று அவ­ச­ர­நிலை அறி­விக்­கப்­பட்­டது. அதன்­மூ­லம் கொவிட்-19 அதி­ர­டிக் கட்­டுப்­பா­டு­கள் மேலும் தீவி­ரப்­ப­டுத்­தப்­படும். வேலை நேரம் குறைக்­கப்­ப­டு­வ­தோடு பெரும்­பா­லா­னோர் வீட்­டில் இருந்து பணி­பு­ரிய கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­வர்.

இந்த நக­ரத்­தில் நடை­பெ­று­வ­தாக இருந்த ஒலிம்­பிக் விளை­யாட்டு தொடக்கவிழா தொடர்பான நிகழ்ச்சிகள் ரத்து செய்­யப்­படும் என்று ஒசாகா ஆளு­நர் ஹிரோ­ஃபுமி யோஷி­முரா நேற்று தெரி­வித்­தார்.

கொவிட்-19 அதி­ர­டிக் கட்­டுப்­பா­டு­கள் ஒசாகா மட்­டு­மின்றி அதைச்­சுற்­றி­யுள்ள ஹியோகோ, மியாகி ஆகிய வட்­டா­ரங்­க­ளி­லும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும்.

இந்­தக் கட்­டுப்­பா­டு­கள் ஏப்­ரல் 5ஆம் திகதி முதல் மே 5ஆம் திகதி வரை ஒரு மாதத்­திற்கு நடப்­பில் இருக்­கும் என்று பொரு­ளி­யல் துறைக்­கான அமைச்­சர் யசு­டோஷிகா நிஷி­முரா தெரி­வித்­தார். இவர் கொவிட்-19 கட்­டுப்­பாட்­டுக் குழு­வின் தலை­வ­ரா­க­வும் பதவி வகிக்­கி­றார்.

இந்த அதி­ர­டிக் கட்­டுப்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காக கூடும் பணிக்­கு­ழு­வில் பிர­த­மர் யோஷி­ஹிட் சுகா இறுதி முடிவை எடுப்­பார் என்று கூறப்­ப­டு­கிறது. கடந்த சில நாட்­க­ளாக ஒசாகா நக­ரில் கிரு­மித்­தொற்று அதை­வி­டப் பெரிய நக­ர­மான தோக்­கி­யோ­வைக் காட்­டி­லும் அதி­கம் உள்­ளது. ஒசாகா வட்­டா­ரத்­தில் நேற்று முன்­தி­னம் மட்­டும் 599 புதிய தொற்­று­கள் பதி­வா­கி­யுள்­ளன.

கடந்த ஜன­வரி மாதத் தொடக்­கத்­தில்­தான் ஜப்­பா­னில் ஆக அதி­க­மாக 654 பேர் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர். அப்­போது நாட்­டின் பல பகு­தி­களில் பிர­த­மர் சுகா அவ­ச­ர­கால அறி­விப்பை விடுத்­தார்.

ஒசா­கா­வில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள அதி­ர­டிக் கட்­டுப்­பாட்டை மீறும் நிறு­வ­னங்­க­ளுக்கு 200,000 யென் (S$2,433.40) அப­ரா­தம் விதிக்­கப்­படும்.

அத்­து­டன் குடி­யி­ருப்­பா­ளர்­கள் கரோ­வோக்கே போன்ற கேளிக்கை நட­வ­டிக்­கை­களில் இருந்து வில­கி­யி­ருக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

ஒசா­கா­வில் இரவு கேளிக்கை நட­வ­டிக்­கை­களில் கலந்­து­கொள்­ளும் இளை­யர்­கள் தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வது அதி­க­ரித்து வரு­வ­தாக சட்­ட­மன்ற தலை­மைச் செய­லா­ளர் கட்­சு­னோபு கட்டோ நேற்று தெரி­வித்­தார். பாதிக்­கப்­பட்ட இளை­யர்­கள் அனை­வ­ரும் 20ல் இருந்து 30 வய­தில் உள்­ள­வர்­கள் என்று அவர் கூறி­னார்.

உருமாறிய கொரோனா தொற்றும் அதிகரித்துள்ளது. எனவே கிருமிப்பரவல் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் அச்சம் தெரிவித்தார்.