சித்திரை புத்தாண்டுக்கு விசேட ரயில் சேவை

சித்திரை புத்தாண்டுக்கு விசேட ரயில் சேவை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பயணிகளின் சௌகரியத்தை கருத்திற் கொண்டு எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவைகளை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கொழும்பு கோட்டை – பதுளை விசேட ரயில் சேவை இரவு 7.30 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.

பதுளை – கொழும்பு கோட்டை விசேட ரயில் சேவை இரவு 9.00 மணிக்கு பதுளை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.

மேற்படி விசேட ரயில் சேவைகள் 09, 10, 11, 12,17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் இயங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு கோட்டை – யாழ்ப்பாணம் விசேட ரயில் சேவை இரவு 9.00 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.

இந்த விசேட ரயில் சேவை 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் இயங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் – கொழும்பு கோட்டை விசேட ரயில் சேவை இரவு 9.50 மணிக்கு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.

அத்துடன் மேற்படி விசேட தொடருந்து சேவை 12, 15, 17, 19, 21 ஆகிய தினங்களில் இயங்கும்.

யாழ்ப்பாணம் – குருணாகல் விசேட ரயில் சேவை இரவு 12.30 மணிக்கு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாவதுடன், இந்த விசேட ரயில் சேவை 12 ஆம் திகதி மட்டும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.