இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு தடுப்பூசி அடுத்த வாரம்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு தடுப்பூசி அடுத்த வாரம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு அடுத்த வாரம் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி ஏப்ரல் 11 ஆம் திகதி தடுப்பூசியின் முதல் டொஸ்ஸும், மே 25 இரண்டாவது டொஸ்ஸும் அணிக்கு வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழுவின் தலைவர் அர்ஜுன டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை – பங்களாதேஷ் அணிக்கிடையிலான டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் இவ்வாறு தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.