பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வெற்றி

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வெற்றி

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

மும்பையில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 221 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில், 222 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 217 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

நேற்றைய போட்டியில் 119 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் சஞ்சு சம்சன் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவானார்.