அத்தியாவசிய உணவு பொருட்களுக்கான வர்த்தமானி

அத்தியாவசிய உணவு பொருட்களுக்கான வர்த்தமானி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரிசி, சீனி, பால்மா மற்றும் சோளம் என்பவற்றின் கையிருப்பை உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் 7 நாட்களுக்குள் நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவிக்க அறிவுறுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மறைத்து வைக்கப்பட்டுள்ள அரசி மற்றும் நெல்லை வௌியில் கொண்டு வருவதற்காக இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் விசேடமாக வௌியிடப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

மேலும், தமது அறுவடைகளை சேமித்து வைத்துள்ள விவசாயிகளுக்கு இந்த வர்த்தமானி அறிவித்தலின் விதிகள் பொருந்தாது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தல்