கடும் மழையினால் வாகன நெரிசல்

கடும் மழையினால் வாகன நெரிசல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று காலை முதல் பெய்து வரும் கடும்மழையின் காரணமாக கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொரளை கின்ஸி வீதி, தும்முல்ல சந்தி மற்றும் ஆமர் வீதி உள்ளிட்ட வீதிகள் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாகவும் இதனால் அவ்வீதிகள் ஊடான போக்குவரத்துக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.