சூர்யாவின் திரைப்படத்திற்கு A சான்றிதழ்

சூர்யாவின் திரைப்படத்திற்கு A சான்றிதழ்

(ஃபாஸ்ட் நியூஸ் |  சென்னை) – சூர்யா நடிக்கும் ஜெய் பீம் திரைப்படத்திற்கு சென்சாரில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நந்தா, ரத்த சரித்திரம் ஆகிய திரைப்படங்களுக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகிவருகிறது.

இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.