PANDORA PAPERS : விசாரணைக்கு ரஞ்சனும் உதவி

PANDORA PAPERS : விசாரணைக்கு ரஞ்சனும் உதவி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறைச்சாலையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, பண்டோரா பேப்பர்ஸ் (Pandora Paper) தொடர்பான சாட்சிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

தனது சட்டத்தரணி ஊடாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் அறிவிப்பதற்கு ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

நேற்று அவரது சட்டத்தரணி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் ஈவா வனசுந்தரவிற்கு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் வெளியான சர்ச்சைக்குரிய பண்டோரோ மோசடியில் சிக்கிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவரான திருகுமார் நடேஷன் தொடர்பான தகவல்களை ரஞ்சன் ராமநாயக்க வழங்க தயாராக உள்ளார் என ரஞ்சனின் சட்டத்தரணி நேற்று தெரிவித்துள்ளார்.

பண்டோரா பேப்பர்ஸ் தொடர்பான விசாரணைகளை ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.