பேரூந்து தீ பிடித்ததில் 46 பேர் பலி

பேரூந்து தீ பிடித்ததில் 46 பேர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் |  பல்கேரியா) – மேற்கு பல்கேரியாவில் பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதை அடுத்து தீ பிடித்ததில் குறைந்தது 46 பேர் உயிரிழந்துள்ளதாக உள்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல்கேரிய தலைநகருக்கு தென் மேற்கே அமைந்துள்ள பொஸ்னெக் கிராமத்திற்கருகில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எரிகாயங்களுடன் 07 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.