இன்று இறுதித் தீர்மானம்

இன்று இறுதித் தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோதுமை மாவுக்கான விலையினை அதிகரிப்பது தொடர்பிலான இறுதி தீர்மானம் இன்று (29) எடுக்கப்படவுள்ளது.

சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவும் நிலையில் குறித்த தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது.

அதேநேரம் இன்று முதல் பாண் மற்றும் கொத்து ரொட்டியின் விலை 10 ரூபாவினாலும், ஏனைய சிறிய உணவு வகைகளின் விலையை 5 ரூபாவினாலும் அதிகரிப்பதற்கு உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்திருந்தார்.