நாளையும் இரண்டு மணி நேர மின்வெட்டு

நாளையும் இரண்டு மணி நேர மின்வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாளைய தினமும் சுழற்சி முறை மின்துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை இன்று பொதுப் பயன்பாடு ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியிருந்தது.

அதற்கமைய, A, B, C ஆகிய குழுக்களில் உள்ளடங்கும் பிரதேசங்களுக்கு மாலை 4.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 2 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏனைய குழுக்களில் உள்ளடங்கும் பிரதேசங்களுக்கு சுழற்சி முறையில் மேற்படி காலப்பகுதியினுள் 3 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உங்களது பிரதேசம் உள்ளடக்கப்பட்டுள்ள குழுவை அறிய…