தனியார் பேரூந்துகளுக்கு இ.போ. டிப்போக்களூடாக எரிபொருள்

தனியார் பேரூந்துகளுக்கு இ.போ. டிப்போக்களூடாக எரிபொருள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனியார் பேரூந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து டிப்போக்களில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மூலம் எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியும் என இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

தெரிவு செய்யப்பட்ட 45 டிப்போக்கள் இதற்காகச் செயற்படுகின்றன.

எதிர்வரும் தினங்களில் மேலும் சில டிப்போக்கள் இந்த முறையின் கீழ் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென்று இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.