கொட்டாவையில்  1,400 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் கைது

கொட்டாவையில் 1,400 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 1,400 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் கொட்டாவ, மாகும்புர பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டதாக மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

இந்த நபரின் வீட்டின் மாடியில் 500 லீற்றர் தொட்டியும், அவரது வணிக வளாகத்தில் மற்றொரு தொட்டியுமாக இரண்டு டீசல் பீப்பாய்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.