இலங்கையில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் பூட்டு! விசேட அறிவிப்பு

இலங்கையில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் பூட்டு! விசேட அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை ஜூலை 4 முதல் 8ம் திகதி வரை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பு உள்ளிட்ட பிரதான நகர பாடசாலைகள் மட்டும் மூடப்பட்டு, ஏனைய அனைத்து பாடசாலைகளும் செவ்வாய், புதன், வியாழக்கிழமைகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், நாளை முதல் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது மற்றும் கடந்த வாரம் பாடசாலை கற்றல், கற்பித்தல் முன்னெடுக்கப்பட்ட விதம் தொடர்பில் கலந்துரையாடல் இன்று (03-06-2022) இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.