கோட்டா கோ கம விற்கு வெள்ளிவரை காலக்கெடு!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

காலிமுகத்திடலில் இருக்கும் எஸ்.டப்ளியு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் சிலை அருகாமையில் இருக்கும் “கோட்டா கோ கம”வுக்கு பொலிஸார் காலக்கெடு விதித்துள்ளனர்.

அதனடிப்படையில், அங்கு நிறுவப்பட்டிருக்கும் கூடாரங்கள் ஓகஸ்ட் 5 வௌ்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னர் அகற்றவேண்டுமென பொலிஸார், ஒலிப்பெருக்கி ஊடாக அறிவித்துள்ளனர்.

அத்துடன் “சட்டவிரோத கட்டமைப்புகளை” அகற்ற மீதமுள்ள எதிர்ப்பாளர்களிடம் ​பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். பொலிஸாரின் இந்த அறிவிப்பினால் அங்கு ஒருவகையான சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் போராட்டகாரகள் அப்புறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.