நாட்டு மக்களின் உதவியை நாடியுள்ள இலங்கை பொலிஸார்

நாட்டு மக்களின் உதவியை நாடியுள்ள இலங்கை பொலிஸார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

26 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரை தாக்கி காயப்படுத்தியமை, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, 02 இராணுவ துப்பாக்கிகளை கொள்ளையடித்தமை போன்ற சம்பவங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இனங்காணப்பட்ட சந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 0718 592209, 0713 064165, 0112 829388 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கோ அல்லது 1997 என்ற இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த மாதம் 14.07.2022 அன்று பொல்துவ சுற்றுவட்டம் மற்றும் நாடாளுமன்ற வீதியை அண்மித்த பகுதியில் இடம்பெற்றிருந்தது.