தேயிலை ஏற்றுமதியில் நஷ்டம்..!

தேயிலை ஏற்றுமதியில் நஷ்டம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

கடந்த 8 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி மூலம் 825 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ள போதிலும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது குறைந்துள்ளதாக இலங்கை தேயிலைச் சபை தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தின் இந்தக் காலப்பகுதியில் தேயிலை ஏற்றுமதி மூலம் 882 மில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்டிருந்தது.

உரத் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிரமங்கள் காரணமாக இந்த வருட தேயிலை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை தேயிலைச் சபை மேலும் தெரிவித்துள்ளது.