யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் இந்நாட்டில் தொழில் தொடங்க பேச்சுவார்த்தை

யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் இந்நாட்டில் தொழில் தொடங்க பேச்சுவார்த்தை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஆஸ்திரேலியாவில் உள்ள யுனைடெட் பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகளுடன் இன்று காலை ஆன்லைன் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள், நிதியமைச்சு, இலங்கை மத்திய வங்கி, முதலீட்டுச் சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய சேமிப்பு முனையம் ஆகியவற்றின் அதிகாரிகளும் இணைந்து கொள்கின்றனர்.

அங்கு, தேவையான வணிக உரிமங்கள், ஒப்பந்தங்கள், அரசின் கொள்கைகள், உள்கட்டமைப்பு, ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் திகதிகள் மற்றும் செயல்பாடுகளை தொடங்குவதற்கான கால அளவு குறித்து விவாதிக்கப்பட்டது