6 பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ் அமைப்பு..!

6 பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ் அமைப்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 6 பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் இன்று(04) விடுதலை செய்துள்ளனர்.

இஸ்ரேலில் இருந்து குறைந்தது 32 தாய்லாந்து நாட்டவர்கள் ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிப்பது தொடர்பாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் மற்றும் தாய்லாந்து முஸ்லிம் குழுக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மாத இறுதியில் 17 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தற்போது விடுவிக்கப்பட்ட 6 பேர் இன்று நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.