பங்களாதேஷ் கிரிக்கட் கேப்டன் ஷகிப் அல் ஹசன் தேர்தலில் அபார வெற்றி – தன் போட்டியாளரை 150,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்..!

பங்களாதேஷ் கிரிக்கட் கேப்டன் ஷகிப் அல் ஹசன் தேர்தலில் அபார வெற்றி – தன் போட்டியாளரை 150,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் ஷகிப் அல் ஹசன் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத் தொகுதியில் பெரும் வெற்றி பெற்றார்.

அந்நாட்டு தேசிய கிரிக்கட் அணியை வழிநடத்தும் பல்துறை வீரர் ஷகிப் அல் ஹசன் பங்களாதேஷ் மேற்கு நகரத்தில் உள்ள மகுரா தொகுதியில் தனது போட்டியாளரை 150,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்று மாவட்டத்தின் உயர்மட்ட நிர்வாகி அபு நாசர் தெரிவித்தார்.

பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அவாமி லீக் கட்சியின் வேட்பாளராக இவர் போட்டியிட்டார்.

ஷாகிப் தேர்தல் போட்டி குறித்து பதட்டமாக இருப்பதாகவும் ஆனால் தேர்தலுக்கு முன்னதாக பெரிய தடைகள் எதையும் காணவில்லை என்றும் கூறினார்.

கிரிக்கெட் கேப்டனாக தனது வேலையை வெற்றிகரமாக செய்ய முடிந்த அதே நேரம், அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்த விளையாட்டிலிருந்து சிறிது இடைவெளி எடுத்தாலும், அவர் ஓய்வு பெறவில்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

ஷகிப்பின் சாதனைகளில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கூற்றுப்படி, ஒரே நேரத்தில் கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களில் ஒவ்வொன்றிலும் ஆல்-ரவுண்டர்களுக்கான முதல் இடத்தைப் பிடித்த முதல் நபர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.