அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இலேசான நிலநடுக்கம்..!

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இலேசான நிலநடுக்கம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று(10) காலை இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘அந்தமானில் புதன்கிழமை காலை 7.53 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. கடல் பகுதியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம்கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டா் அளவு கோலில் 4.1-ஆகப் பதிவானது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.