தான் ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டது ஏன்? – விபரித்து புத்தகம் வெளியிடும் கோட்டா..!

தான் ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டது ஏன்? – விபரித்து புத்தகம் வெளியிடும் கோட்டா..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜனாதிபதி பதவியிலிருந்து தாம் வெளியேற்றப்பட்டதற்கு காரணமான போராட்டங்கள் தொடர்பான புத்தகம் ஒன்றை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினரின் பங்களிப்புடன், குறிப்பாக இலங்கையில் ஜனநாயகத்தை குழிபறிக்கும் வகையில் செயற்படும் வெளிநாட்டுக் கட்சிகளால், ஜனாதிபதி பதவியில் இருந்து அவரை வெளியேற்றுவதற்கான சதித்திட்டம் குறித்தே அவர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

பல சமூக ஊடக இடுகைகளின்படி, ‘என்னை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றிய சதி’ என்ற குறித்த புத்தகம் நாளை 7 ஆம் திகதி வியாழக்கிழமை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை இந்த புத்தகம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.