ஊடகங்கள் தொடர்பிலான தகவல் அறியும் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஊடகங்கள் தொடர்பிலான தகவல் அறியும் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கையில் மற்றுமொரு சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் தயாராகி வருகிறது.

இதனடிப்படையில் அமைச்சரவையில் இன்று அதற்கு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

இலங்கையில் ஊடகங்கள் தொடர்பிலான தகவல் அறியும் சட்டமூலம் குறித்து பல ஆண்டுகளாக முரண்பாட்டு நிலை தோன்றியிருந்ததது.

இந்நிலையில் இன்று இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்து சட்டமாக்கிக்கொள்வதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.