ஊடகவியலாளர்களுக்கு இலவச அலைபேசி

ஊடகவியலாளர்களுக்கு இலவச அலைபேசி

இலங்கையிலுள்ள சகல ஊடகவியலாளர்களுக்கும் இலவசமாக ஸ்மார்ட் அலைபேசிகள் மற்றும் சிறப்பு சலுகைகளுடன் கூடிய இணைப்பும் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொலைதொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் வரவு- செலவுத் திட்ட  விவாதத்தில் உரையாற்றும் போது இவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.