
கொழும்பு துறைமுகத்திட்ட விவகரம் ஜனவரி 6ல் உயர்மட்டக்கூட்டம்
கொழும்பு துறைமுகத்திட்டம் மற்றும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான உயர் மட்டக்கூட்டமொன்று, எதிர்வரும் ஜனவரி மாதம் 06ஆம் திகதி இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் வர்த்தகத்துறை அமைச்சின் ஆசிய விவகாரங்களுக்கான ஆலோசகர், ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு வருகை தருவார் என்றும் கொள்கைத்திட்டமிடல் பிரதி அமைச்சர் நிரோஷன் பெரேரோ மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவினருடன் இடம்பெறவுள்ள கூட்டத்துக்கு, அவர் தலைமை தாங்குவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.