லாரி டிரைவரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு

லாரி டிரைவரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு

திருவள்ளூர் மாவட்டம் பூச்சத்திரம் கிராமம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் லட்சுமணன் (48), லாரி டிரைவர். இவர் சென்னையில் லாரி மூலம், மணல் விற்பனை செய்து வருகிறார். நேற்று (2016-03-07) முன்தினம் இரவு வேலூர் மாவட்டத்தில் உள்ள மணல் குவாரியில் மணல் எடுப்பதற்காக லாரியை ஓட்டி சென்றார். காஞ்சிபுரம் அடுத்த சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையான ராஜகுளம் பகுதியில் இரவு உணவு சாப்பிடுவதற்காக அங்குள்ள ஓட்டல் முன்பு நிறுத்தினார்.

சாப்பிட்ட பின்னர் லட்சுமணன் லாரி அருகே வந்தார். அப்போது அங்கு 2 பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், அவரை வழிமறித்து பணம் கேட்டது. ஆனால், லட்சுமணன் பணம் இல்லை என கூறியுள்ளார். ஆத்திரமடைந்த கும்பல் லட்சுமணனை இரும்பு ராடால் தாக்கியது. இதில், அவர்  மயங்கி கீழே விழுந்தார். உடனே அந்த கும்பல் அவர் வைத்திருந்த ரூ 8,000 பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தப்பினர். காயமடைந்த லட்சுமணன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எஸ்ஐ. கண்ணன் வழக்கு பதிந்து, தப்பிய கும்பலை தேடுகிறார்.