பேஸ்புக் தாக்கப்படும் அபாயத்தை உணர்த்தியவருக்கு பரிசுத்தொகை
ஹேக்கர்கள் மூலமாக பேஸ்புக் கணக்குகள் தாக்கப்படும் அபாயத்தை உணர்த்திய இந்தியாவைச் சேர்ந்த ஆனந்த் பிரகாஷ் என்ற இளைஞருக்கு பேஸ்புக் நிறுவனம் பரிசுத்தொகையை வழங்கியுள்ளது.
பொதுவாக பேஸ்புக் கணக்கின் கடவுச்சொல்லை மறந்துவிட்டால் அதனை மீட்டெடுக்கும் வகையிலாக 6 இலக்க ரகசிய எண் ஒன்று நமது மின்னஞ்சல் முகவரிக்கோ, கைப்பேசி எண்ணிற்கோ அனுப்பப்படும் அதனை உபயோகித்து புதிய கடவுச்சொல்லை நாம் உருவாக்கிக்கொண்டு மீண்டும் பேஸ்புக் கணக்கை உபயோகப்படுத்தலாம்.
அவ்வாறு அனுப்பப்படும் 6 இலக்க ரகசிய எண்ணை இலகுவாக பேஸ்புக்கின் பீட்டா வெர்சன் வழியாக ஹேக் செய்யப்படும் வழி உள்ளதை கண்டுபிடித்த ஆனந்த் பிரகாஷ், அதனை பேஸ்புக் நிறுவனத்திற்கு தெரியப்படுத்தினார்.
இந்த ஆபத்தை ஒத்துக்கொண்ட பேஸ்புக் நிறுவனம், ஆனந்த்திற்கு $15,000 பரிசு தொகை வழங்கியுள்ளது.