வசந்த மெண்டிஸ் எனப்படும் பிரபல ஹெரோயின் கடத்தல் மன்னன், தாய்லாந்தின் பேங்கொக் நகரில் வைத்து அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால், 2013 ஆம் ஆண்டில் குறித்த நபருக்கு எதிராக ”சிவப்பு அறிவித்தல்” பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்று அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடந்த வருடம் கைது செய்யப்பட்ட லைபீரிய பிரஜையின் மூலம், வசந்த மெண்டிஸ் எனப்படும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்தன.
குறித்த லைபீரிய பிரஜை இராஜதந்திரிகளுக்கான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சித்திருந்தார். 30 கிலோகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அவர் தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே வசந்த மெண்டிைஸ கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி நாடப்பட்டது.