11 வீதத்தில் இருந்து 15வீதமாக அதிகரிக்கப்பட்ட வட் வரி இன்று முதல் அமுலாகிறது.
எனினும் இது கல்வி மற்றும் மருத்துவ பொருட்கள் விடயத்தில் அமுல்செய்யப்படமாட்டாது என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சர் ரவி கருணாநாயக்க தமது அமைச்சில் வைத்து இதனை தெரிவித்துள்ளார்.
எனினும் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் மருத்துவ சேவைகளுக்கு வட்வரிபொருந்தும்.
மேலும், தொலைத்தொடர்பு சேவைகளுக்கும் வட்வரி பொருந்தும். இந்நிலையில் வட்வரியின் மூலம் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தவிர்த்துக் கொள்ளப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வட்வரி காரணமாக அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.