பசிலின் கைதும் விமலின் அறிக்கையும்

பசிலின் கைதும் விமலின் அறிக்கையும்

அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களை விட்டும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கே பசில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ஷவின் கைது தொடர்பில் அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது அரசாங்கத்தினதும், அரசாங்கத்துக்கு ஆதரவான உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியினதும் காலம் குறித்து தயாராகிய ஒரு நடவடிக்கை என்பது தெளிவான ஒன்று.

அன்றைய தினம் ராஜபக்ஷ குடும்பத்தின் முக்கிய நபர் ஒருவரை கைது செய்ய இருப்பதாக உத்தியோகப்பற்றற்ற இணையத்தளத்தில் மக்கள் விடுதலை முன்னணி முன்னறிவிப்புச் செய்திருந்தமையும் இதற்குத் தகுந்த ஆதாரமாகும்.

வட் வரி அதிகரிப்பு, பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கம், கைது செய்யப்பட்டுள்ள புலிப் பயங்கரவாதிகளின் விடுதலை, தேர்தல் தள்ளிப் போடல் போன்ற அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கான மக்களின் எதிர்ப்பை திசை திருப்பவே நேற்று பசிலின் கைது இடம்பெற்றதாகவும் விமல் வீரசங்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.