ஹிருணிகாவின் திருமண வாழ்வுக்கு முற்றுப்புள்ளியா..??

ஹிருணிகாவின் திருமண வாழ்வுக்கு முற்றுப்புள்ளியா..??

அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினரான ஹிருணிகா பிரேமசந்திரவை அவரது கணவர் விவாகரத்து செய்ய முன் வந்துள்ளதாக இணையத்தள செய்தியொன்று பரவியிருக்கின்றது.

மேலும் ஹிருணிகாவிற்கு இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறியே ஹிருணிகாவின் கணவர் விவாகரத்து கோரியுள்ளதாக குறித்த செய்தியில் வெளியிட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், குறித்த விவாகரத்து வழக்கில் ஐக்கிய தேசிய கட்சியின் தென் மாகாண நீதிபதி ஒருவர் ஹிருணிகா சார்பில் ஆஜராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த விடயம் பொய் என்றும் , ஹிருணிகா தனது கணவருடன் ஒற்றுமையாக உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த செய்தியை வெளியிட்டுள்ள சிங்கள இணைய ஊடகமானது இந்த செய்தி தொடர்பில் எவ்வித மறுப்பையோ அல்லது மன்னிப்பையோ சம்பந்தப்பட்டவர்களிடம் கோரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.