கோப்பி பருகினால் நோய்கள் நீங்கும்!

கோப்பி பருகினால் நோய்கள் நீங்கும்!

கோப்பி அருந்துவதால் நடுத்தர வயதில் பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவதாக,அது குறித்து ஆய்வுகள் மேற்கொண்ட சுவீடன் நாட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நடுத்தர வயதைத் தாண்டுபவர்கள் நாளொன்ருன்க்கு 2 அல்லது 3 கோப்பைகள் கோப்பி அருந்தினால் மன அழுத்தம், மந்த நிலை, மறதி போன்ற நோய்கள் 60-80 சதவீதம் வரை குறைவடையும் என ஆய்வுக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஞாபகசக்தி அதிகரித்தல்;
கோப்பியிலுள்ள ‘கபின்’ எனும் ஊக்கி உடல் செயல்பாடுகளை விரைவாக இயங்கச்செய்யக் கூடியது. ஞாபகசக்தியினை அதிகரிக்கச் செய்வதுடன், இதுவே மந்த நோயைக் கட்டுப்படுத்துவதாகவும் கூறுகின்றது.