இரண்டாவது முறையும் விம்பிள்டன் வெற்றியை சுவீகரித்தார் மரே.

இரண்டாவது முறையும் விம்பிள்டன் வெற்றியை சுவீகரித்தார் மரே.

பிரித்தானியாவின் என்டி மரே (Andy Murray) இரண்டாவது முறையும் விம்பிள்டன் வெற்றியாளராகியுள்ளார்.
கனடாவின் மைலோஸ் ரோகிக் (Milos Raonic) வுடன் நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 6-4, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் மரே வெற்றிப்பெற்றார்.
என்டி மரே கடந்த 2012 ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் டெனிஸ் போட்டியிலும் 2013ஆம் ஆண்டு விம்பிள்டனின் வெற்றி பட்டத்தையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் பிரிவில் அமரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 7வது தடவையாக விம்பிள்டன் பட்டத்தையும் 22வது தடவையாக ‘கிராண்ட்ஸ் லாம்’ பட்டத்தையும் வெற்றிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.