முரளிக்கு ICC இனால் அதியுயர்  கௌரவ விருது

முரளிக்கு ICC இனால் அதியுயர் கௌரவ விருது

உலக சாதனையாளரான இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின், அதி உயர் விருதான ICC Cricket Hall of Fame விருது வழங்கப்படவுள்ளது.

இந்த விருதைப் பெரும் முதல் இலங்கையர் இவராவார்.

மேலும், இவருடன் முன்னாள் அவுஸ்திரேலிய மகளிர் அணித் தலைவியான, கரீன் ரோல்டன் (Karen Rolton), அவரது சக வீராங்கனை ஆதர் மொரிஸ் (Arthur Morris), இங்கிலாந்தின் ஜோச் லோக்மன் (George Lohmann) ஆகியோரும் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கிரிக்கெட் வரலாற்றில் சாதனைகள் புரியும் வீரர்களை ICC Cricket Hall of Fame என்ற வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கௌரவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.