விளக்கமளிக்க சென்ற வீரவன்சவுக்கு அறிவுரை!

விளக்கமளிக்க சென்ற வீரவன்சவுக்கு அறிவுரை!

புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் தேவையற்ற பயத்தை ஏற்படுத்தவேண்டாம் என்று விமல் வீரவன்சவுக்கு மல்வத்த மகாநாயக்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.

அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு தொடர்பில் மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்கர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியினர் இன்று கண்டிக்கு விஜயம் செய்தனர்.

இதன்போது கருத்துரைத்த விமல் வீரவன்ச, புதிய அரசியமைப்பு நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு சாதகமற்றது என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் புதிய அரசியலமைப்பின் கீழ் நாட்டின் பிரிவினைக்கான எந்த அம்சங்களும் இடம்பெறாது என்று ஜனாதிபதியும் பிரதமரும் தம்மிடம் உறுதியளித்துள்ளனர்.

அத்துடன் அரசியலமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பையும் நடத்தமுன்வந்துள்ளனர்.

எனவே புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தவேண்டாம் என்று மகாநாயக்கர் விமல் வீரவன்சவுக்கு அறிவுரை வழங்கினார்.