சானுக ரத்துவத்த உட்பட ஐவரினதும் விளக்கமறியல் நீடிப்பு.

சானுக ரத்துவத்த உட்பட ஐவரினதும் விளக்கமறியல் நீடிப்பு.

நிதிமோசடி குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சானுக ரத்துவத்த உட்பட ஐவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 07 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

2.4 பில்லியன் அரச பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் குறித்த ஐவரையும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கடந்த 14 ஆம் திகதி கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது