கோப் குழுவில் மீளவும் முன்னிலையாகவுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு…

கோப் குழுவில் மீளவும் முன்னிலையாகவுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு…

கோப் குழுவில் இன்று(09) மீளவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னிலையாகவுள்ளது.

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் வாக்கு மூலம் வழங்கும் பொருட்டு, இன்று முன்னிலையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் கோப் குழு முன்னிலையில் பிரசன்னமாகியிருந்தபோதும், குறித்த தனியார் மருத்துவக் கல்லூரியை சட்ட ரீதியாக அனுமதிப்பது தொடர்பான அறிக்கையை வழங்குமாறு கோப்குழு கோரி இருந்தது.

இதன்படி அடிப்படையிலேயே இன்றைய பிரசன்னம் இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.