தீவிரவாத தாக்குதல் குறித்த சந்தேகத்தில் பாகிஸ்தான் அணி வீரர் அமீர் தடுத்து வைக்கப்பட்டாரா..?

தீவிரவாத தாக்குதல் குறித்த சந்தேகத்தில் பாகிஸ்தான் அணி வீரர் அமீர் தடுத்து வைக்கப்பட்டாரா..?

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முஹம்மத் அமீர் லண்டன் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக வெளியாகிய செய்திகளுக்கு அமீர் விளக்கம் அளித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முஹம்மத் அமீர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் லண்டன் சென்றுள்ளார்.

நேற்று முன்தினம்(22) இங்கிலாந்து நாடாளுமன்றம் அருகே தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. குறித்த தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியதனை அடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் பிரபலமான ஹீத்ரோ விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகள், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முஹம்மத் அமீரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள் என்று செய்திகள் வெளியானது.

இதுகுறித்து முஹம்மத் அமீர், தனது டுவிட்டர் பக்கத்தில், அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. நான் எனது மனைவி மற்றும் செல்ல மகளுடன் சந்தோஷமாக நேரத்தை கழித்து வருகிறேன் என்று தனது குடும்பத்துடன் கூடிய படத்தை வெளியிட்டுள்ளார்.

Image result for pakistani cricketer amir at london airport

 

(rizmira)