ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் – சந்தேக நபர்கள் பிணையில் விடுவிப்பு…

ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் – சந்தேக நபர்கள் பிணையில் விடுவிப்பு…

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து ஐந்து இராணுவ வீரர்கள் உட்பட இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஆகிய ஆறு பேருக்கும் இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த ஆறு பேரும் மற்றொரு வழக்கில் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதால் அவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இன்று(30) இடம்பெற இருந்த சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கான அடையாள அணி வகுப்பு பிற்போடப்பட்டுள்ளது.

கீத் நொயார் இன்று(30) நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காததன் காரணமாவே அடையாள அணி வகுப்பு பிற்போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு மீண்டும் ஜூன் மாதம் 01ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

(rizmira)