உங்க முகப்பரு கோளாறுகளை சரி செய்ய பாகற்காய் டிப்ஸ்..

உங்க முகப்பரு கோளாறுகளை சரி செய்ய பாகற்காய் டிப்ஸ்..

பாகற்காய் காய்கரி வகைகளிலேயே மிகக் குறைவாக பயன்படுத்தப்படுகிறது. பாகற்காயில் கசப்புத்தன்மை அதிகமாக உள்ளதால் இதனை பலர் உணவில் சேர்த்து கொள்வதில்லை.

பாகற்காயில் ப்ரோடின் மற்றும் விட்டமின் சத்துகள் அதிகமாக உள்ளது. அதனால் உங்கள் உடல் நலத்திற்கு மிகுந்த பயனை கொடுக்கும். பாகற்காயை சருமத்தின் மேல் உபயோகித்தால் அது அழகு சம்பந்தமான பயன்களை கொடுக்கும்.

1.ஒளி வீசும் தோல்:

பாகற்காய் முகத்தில் உள்ள அழுக்கினை போக்கி ஒளி வீசும் ஆரோக்யமான தோலினை கொடுக்கிறது. பாகற்காயில் உள்ள விட்டமின் மற்றும் ப்ரோடின் சத்து அந்த அழுக்குகளை அடியோடு விரட்டிவிடும். சிறிதளவு பாகற்காய் சாற்றினை முகத்தில் பூசி கழுவ வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த முறையில் செயல்பட்டால் தோல் ஒளி வீசும் தன்மையை பெற்றுவிடும்.

2.முகப்பரு சிகிச்சை:

பாகற்காயில் நுண்ணுயிர் கிருமிகளையும் கடும் வீக்கத்தையும் போக்கும் தன்மை உள்ளது. இதனால், முகத்தில் தோன்றும் தேவையற்ற முகப்பரு கோளாறுகளை சரி செய்ய உதவும் . பாகற்காயை சிறிது எடுத்து அரைத்து பசை போல் செய்து கொள்ள வேண்டும். இதனுடன் சிறிது ஜாதிக்காய் பவுடர் மற்றும் தயிர் கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி பின்னர் குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும்

3.தோல் எரிச்சலுக்கான சிகிச்சை:

உங்கள் தோல் வறட்சி மிகுந்து அரிப்பு தன்மையுடன் இருந்தால், பாகற்காயின் மூலம் தோல் எரிச்சலை போக்க முடியும். பாதி பாகற்காயை வெட்டி அதனை பசை போல் செய்து கொள்ள வேண்டும். கருவேப்பிலையை நன்றாக காய வைத்து பொடித்து இரண்டு கரண்டி அளவு அந்த பாகற்காய் பசையுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை தோலின் மேல் பூச வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி விடவேண்டும். இதன்மூலம் தோல் அரிப்பு மற்றும் தோல் எரிச்சலை தடுக்க முடியும்.

 

(rizmira)