சோம்பலால் அதிகரிக்கும் புற்றுநோய்…

சோம்பலால் அதிகரிக்கும் புற்றுநோய்…

செல்வ வளமை, சொகுசான வாழ்க்கை புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. புகைப்பதை குறைப்பது, உடல் பருமனைத் தடுப்பதன் மூலம் புற்று நோய்க்குத் தடை போடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மனித குலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பயங்கர வியாதிகளுள் ஒன்று புற்றுநோய். புற்று நோயை முற்றிலும் குணமாக்க இன்னும் வழிபிறக்கவில்லை. இருப்பினும், அது ஏன் ஏற்படுகிறது என்பதை ஓரளவு ஊகிக்க முடிகிறது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதில் ஒன்றுதான் உடல் அலுங்காத சோம்பல் வாழ்க்கை. புகையிலை, மது, புகை போன்ற பழக்கங்களால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என்பது நாம் அறிந்ததே.

செல்வ வளமை, சொகுசான வாழ்க்கை புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. மார்பகப் புற்று நோய், புராஸ்டேட், குடல் புற்றுநோய் போன்றவை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைப் பின்பற்றும் வளர்ந்த நாடுகளைச் சேர்ந்தவர்களை அதிகம் பாதிக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருவதால் புற்றுநோய் அபாயம் அதிகரித்து வருகிறது.

கடந்த 2008-ம் ஆண்டு உலக அளவில் சுமார் 1¼ கோடியாக இருந்த புற்று நோயாளிகளின் எண்ணிக்கை, 2030-ம் ஆண்டு இரண்டு மடங்காகிவிடும் என்கின்றனர் நிபுணர்கள். பதப்படுத்திய அல்லது துரித உணவுகளால் ஏற்படும் உடல் பருமன், குறைவான உடற்பயிற்சி மற்றும் அதிகமான புகைப் பழக்கமே இதற்குக் காரணம்.

 
(rizmira)