பேராசிரியர் காலோ பொன்சேகா’வின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு..

பேராசிரியர் காலோ பொன்சேகா’வின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு..

இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகாவின் பதவிக் காலம் இன்றுடன்(30) நிறைவடைகின்றது.

பேராசிரியர் காலோ பொன்சேகா கடந்த 2012 ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த பதவியை வகித்து வருகின்றார்.

மருத்துவ சபையின் தலைவர் ஒருவரின் பதவிக் காலம் 5 வருடங்களாக உள்ள நிலையில் அவரின் பதவி காலம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக இருந்தது.

எவ்வாறாயினும், அவரின் பதவி காலத்தை 6 மாதங்களாக நீடிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன்படி இன்றுடன் மருத்துவ சபையின் தலைவர் பதவியில் வெற்றிடம் ஏற்படும் அதேவேளை இதுபற்றி சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக மருத்துவ சபையின் பதிவாளர் டெரன்ஸ் டி சில்வா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் புதிய தலைவர் ஒருவரை நியமிக்கவோ அல்லது காலோ பொன்சேகாவை மீண்டும் பதவியில் நீடிப்பது தொடர்பாகவே சுகாதார அமைச்சு இதுவரை எந்தவித அறிவித்தலையும் விடுக்கவில்லை என பதிவாளர் மேலும் குறிப்பிட்டார்.

 

(rizmira)